பண்டிகைகள் எல்லாம்
பண்பாட்டினை வெளிப்படுத்தும்...
வண்டிகளை நிறைக்கும் விருந்தோம்பல்
வண்டிகளில் மகிழ்வோடு உலாவர
அழகான ஆடையணிகலன் அன்பளிப்பு
வழக்கமாக அடிக்கடி உள்ளம் நினைவூட்ட
பழக்கப்படுத்துவர் அன்பளிப்பு பொருள் (Gift) நீட்டி
பழகிப்போன பண்டிகைக் காலத்தில்
வழக்கமாக என்னைப் போன்றோர்
தெருவழியே ஏழை, எளியோராக வாழ
தெருவழியே செல்லும் உங்களில் எவராயினும்
இப்படி எதுவாயினும் எமக்கு உதவினீர்களா?
அப்படி உதவி செய்திருந்தால் - நீங்கள் தான்
தெருவழியே வாழும் எங்களுக்குக் கடவுள்!
இவ்வண்ணம்
தெருவழியே வாழும் ஏழை, எளியோர்!
Wednesday, 18 October 2017
வலைப்பூ உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துகள்
Labels:
2-வாழ்த்தும் பாராட்டும்

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!